பாத்திரம் அறிதல்
உதவி வேண்டும் என்று மகாராஜாவிடம் யாசகம் கேட்க ஒரு ஞானி போனார். அவர் பிராத்தனையில் இருப்பதாகவும் ஞானி மட்டும் உள்ளே போகலாம் என்றும் அனுமதி தந்தார்கள். அரசர் “ஆண்டவரே… என் தேவைகள் பெருகி விட்டன. இன்னும் பொன்னும் மணியும் நாடும் கொடு” என்று பிராத்தனையைய் முடித்தார். உதவி கேட்டு வந்த ஞானி விருட்டென்று அரசரிடம் எதையும் கேட்காமல் வெளியே புறப்பட்டார். அரசர், “சுவாமி உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றபடி பின்னால் வந்தார். “வேண்டாம்… நீயே பிச்சைக்காரன்… உன்னிடம் நான் ஏன் பிச்சை எடுக்க வேண்டும். நேராகக் கடவுளிடமே பிச்சை கேட்டுக் கொள்வேன்” என்றபடி வேகமாகப் போய்விட்டார்.
கடவுள் மேல் பாரத்தைக் போட்டுவிட்டால் கஷ்டம் தெரியாது. இறைவன் தரும் இன்பம், உலகம் தரும் இன்பத்தைவிட உயர்வாகவே இருக்கும்.
நன்றி.... கொல்லிமலை ஆனந்தன்....
உதவி வேண்டும் என்று மகாராஜாவிடம் யாசகம் கேட்க ஒரு ஞானி போனார். அவர் பிராத்தனையில் இருப்பதாகவும் ஞானி மட்டும் உள்ளே போகலாம் என்றும் அனுமதி தந்தார்கள். அரசர் “ஆண்டவரே… என் தேவைகள் பெருகி விட்டன. இன்னும் பொன்னும் மணியும் நாடும் கொடு” என்று பிராத்தனையைய் முடித்தார். உதவி கேட்டு வந்த ஞானி விருட்டென்று அரசரிடம் எதையும் கேட்காமல் வெளியே புறப்பட்டார். அரசர், “சுவாமி உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றபடி பின்னால் வந்தார். “வேண்டாம்… நீயே பிச்சைக்காரன்… உன்னிடம் நான் ஏன் பிச்சை எடுக்க வேண்டும். நேராகக் கடவுளிடமே பிச்சை கேட்டுக் கொள்வேன்” என்றபடி வேகமாகப் போய்விட்டார்.
கடவுள் மேல் பாரத்தைக் போட்டுவிட்டால் கஷ்டம் தெரியாது. இறைவன் தரும் இன்பம், உலகம் தரும் இன்பத்தைவிட உயர்வாகவே இருக்கும்.
நன்றி.... கொல்லிமலை ஆனந்தன்....
Comments
Post a Comment